Sunday, May 31

“வில்”WILL திரைவிமர்சனம்.

:இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பிர்லா போஸ், பதம் வேணு குமார், மோகன் ராமன் ,லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்  :-
இயக்கம் : எஸ். சிவராமன்
தயாரிப்பு: ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ்
இணை தயாரிப்பு: கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல்
ஒளிப்பதிவு : டி.எஸ்.பிரசன்னா
இசை : சௌரப் அகர்வாலின்
எடிட்டர்: ஜி.தினேஷ்
மக்கள் தொடர்பு : வேலு

படத்தை பார்ப்போம்

ஆந்திர மாநிலம் சித்தூரில் தொழிலதிபர் தனது சித்தூர் சொத்துக்களை எல்லாம் தன் இரண்டு மகன்கள் மேல்  உயில் எழுதி வைத்து விட்டு .சென்னையில் உள்ள  இருக்கும் வீட்டை மட்டும்  யாரோ அலேக்யா என்ற பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து இறந்து போகிறார் இதை தெரிந்து கொண்ட வாரிசுகள்  நமக்கு  சேர வேண்டிய சொத்து யாரோ ஒரு பெண்ணுக்கு  போகுவதை விரும்பாத வாரிசுகள் இவர்களே ஒரு போலியான பெண்ணை ஏற்பாடு செய்து (ஆள் மாறட்டம் ) நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிற்க வைத்து  இவள்தான் அந்த உயிலுக்க்கு சொந்தகாரி கூறுகிறார்கள் நீதிபதி சேனியா அகர்வால் இவர்கள் மீது சந்தேகம்  ஏற்பட நீதிமன்றதில் இருக்கும் (எஸ்.ஐ SI )விக்ராந்த்யிடம் உண்மையான உயில் சொந்தகாரரை அழைத்து வரும்படி பொறுப்பை ஒப்படைக்கிறார்   உண்மையான உயில் சொந்தகாரர் வந்தாரா ? இறந்த தொழிலதிபருக்கும்  அலேக்யா என்ற பெண்ணுக்கும் (உயில் சொந்தகாரி) இவளுக்கு என்ன சம்பந்தம்?  ஆள்மாறட்டம் பெண் யார் ? படத்தின் மீதிகதை …

நீதிபதியாக சோனியா அகர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உண்மையை கண்டறிய எடுக்கும் முயற்சி நீதியரசராக தன் பணியை சிறப்பாக  கொடுத்தார்.

விக்ராந்த் சப் இன்ஸ்பெக்டர் பணி உண்மையை தேடி செல்லும் போது பல ஆபத்துக்கள் வந்தாலும் உடைத்தெறிந்த முன்னேறி சென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன் நம்பிக்கை கொடுத்து நீதிபதியிடம் ஒப்படைத்தது சிறப்பான போலீஸ் நிருபித்து உள்ளார்

அலேக்யா கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார் மற்றும் இப்படத்தில்  அனைவரும் சிறப்பாக நடித்துள்ளன.

நீதிமன்ற காட்சி வெளிபுற காட்சி .எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு :சிறப்பாக இருந்தது
இசை :சௌரப் அகர்வாலின் (சேனியா அகர்வால் தம்பி) பின்னனி இசை படம் ஒட்டத்திற்கு ஏற்ற சரியாக நேர்த்தியாக  இருந்தது.எடிட்டர்: ஜி.தினேஷ் படத்திற்கு தேவையான காட்சி மட்டும் இணைத்துக் கொடுத்துள்ளார்.

தமிழ்சினிமா குற்ற பின்னனி கொண்ட பல வழக்கு சம்பந்தபட்ட படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் உயில் சொத்துக்கள் பற்றி இயக்குநர் எஸ். சிவராமன்  நேர்த்தியான திரைகதை அமைத்து விறுவிறுப்பாக காட்சி நகர்தல்   அடுத்தது என்ன என்ற எதிர்பார்பை ஏற்படுத்தி எல்லோரும் ரசிக்கும் படி  கொடுத்துள்ளார்