பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம்
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் படத்தை கொண்டாடிய நிலையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அந்த விமர்சனத்தில், “ தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் இருக்கிறது. இப்படத்தில் வருபவர்கள் குடிப்பொறுக்கிகள். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகளின் கால்கள் அழுகி இறக்கின்றன.
இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள். மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால், அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது.
கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல...
