சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’
சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’
சென்னை, செப்டம்பர் - 05 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். உதவி தேவைப்படும் தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 46-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை தியாகராய நகர் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக அரங்கில் வைத்து நேற்று மாலை (செப்டம்பர் 04) நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி ...

