“அந்தரன்” திரை விமர்சனம்.
ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் தயாரிக்க, பிரஜின், இவானா , சாம்பசிவம், அனுபமா, நடிப்பில் சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
படத்தை பார்ப்போம்
நாயகி தொழிலதிபர் எம்.கே.சாம்பசிவத்தின் மகள் இவானா வருண், இவரை காதலிக்கும் இளைஞர் கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகும் அவரை திருமணம் செய்ய வரும் நபர்களுக்கு தொடர்ந்து மரணம் நிகழ்கிறது. ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். போலீசில் புகார் கொடுக்கிறார். இது சாதாரண சம்பவம் இல்லை என்பதை காவல்துறை கண்டுபிடிக்க, இந்த வழக்கு போலீஸ் அதிகாரி பிரஜினிடம் வருகிறது. இவானாவை மையமாக வைத்து விசாரணையை தொடங்கும் பிரஜின், அவரையே காதலிக்க தொடங்குகிறார்.இன்ஸ்பெக்டர் பிரஜின் தீவிர விசாரணையில் ஈடுபடும்போது பல மர்மங்கள் வெளியாகி அதிர வைக்கிறது.அது...
