*5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி*
*உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி*
*உழவு தொழில் செய்வோருக்கு அங்கீகாரம் கொடுத்த நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன்*
*5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி*
கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பல...
