“கர” திரை விமர்சனம்.
திருடனாக இருந்து, திருந்தி நல்லவனாக வாழ நினைக்கும் ஒருவன், பொருளாதார நிலை அவனுக்குள் உண்டாக்கும் அழுத்தம், அதன் பிறகு தனக்காகவும் ஊர் மக்களுக்காகவும் அவன் எடுக்கும் அவதாரம் என இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த 'கர' படத்திற்கு இறுக்கமான முடிச்சுகள் போட்டு நகர்த்தியிருக்கிறார்.
திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிறார். அங்கு திருந்தி நல்லவனாக வாழ்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் அவர், கையில் போதுமான பணம் இல்லாததால், சொந்த ஊரிலிருக்கும் நிலத்தை விற்றுவிட நினைக்கிறார். அதற்காகச் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு வருகிறார்.
அங்கு ஏற்கெனவே அவருடைய தந்தை அந்த நிலத்தை அடமானம் வைத்து, வாங்கிய டிராக்டருக...
